Monday 23 September 2013

கல்யாண சீர்கள்

முதல் நாள்
"நாள் விருந்து" இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.
இரண்டாம் நாள்
"கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்"
.
இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழைதென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர்அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர்முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும்.பொதுவாக ஆல மரம்அரச மரம்பாலை மரங்களில் இது வெட்டப்படும்காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும் ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர்இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள்நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்துமஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர்.முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.
"கங்கணம் கட்டுதல்"
அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.
"நிறைநாழி செய்தல்"
வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்துநூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர்இது நிறைநாழி எனப்படும்இதனை ஒரு பேழையில் வைப்பர்அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.
"இணைச்சீர்"
இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும்மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர்இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார்இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார்இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும்.சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார்அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார்பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார்பின் இருவருக்கும் அருகு மணம் செய்து வைத்து இருவரையும் திருமண வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரிகொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார்தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர்மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்றுமணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.
மூன்றாம் நாள்

"முகூர்த்தம் இதை தாலி கட்டு" என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.
கைகோர்வை சீர், மங்கல வாழ்த்து, புலவனார் வாழ்த்து, மாப்பிள்ளை மச்சினன் விளையாட்டு போன்றவை விலாவாரியாக பின்னர் பதிக்கப்படும்.


  • தம் மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல்
  • மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல்
  • வாசல் கவுலி குறிப்பு கேட்டறிதல்
  • மாப்பிள்ளை வீட்டார் நிச்சயார்த்தம் மூலம் பெண்ணை உறுதி செய்தல்
  • அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல்
  • திருமணநாள் குறித்து பெண் மடியில் வெற்றிலை கட்டுதல்
  • தட்டார் பூட்டும் தாலிக்கும் பொன்னோட்டம் பார்த்தல்
  • மணநாள் குறித்து தேன்பனை ஓலை எழுதல் (பத்திரிக்கைக் அச்சடித்தல்)
  • முகூர்த்த நெல் போட்டு வைத்தல்
  • விறகு வெட்டி பிளந்து மூன்று கத்தையாகக் கட்டுதல்
  • சம்மந்திகள் உப்புச்சக்கரை மாற்றி சிகப்பு பொட்டு வைத்தல்
  • மாப்பிள்ளை வீட்டில் பருப்பும் சோறும் விருந்துண்ணல்
  • பதினெண் கட்டுக் கன்னிகளுக்ளூக்குத் தாம்பூலம் கொடுத்தல்
  • பெண்ணெடுக்கும் மாமனுக்குத் தாம்பூலம் வழங்குதல்
  • இணைச்சீர் செய்யும் சகோதரிக்கும் தாம்பூலம் வழங்குதல்
  • பெண் கூரைச்சேலை சோமான் உருமாலை வாங்குதல்.
  • பெண் வீட்டில் பந்தல் போடுதல்
  • மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் புறப்படுதல்.
  • எழுதிங்கள்காரர், மூத்தோர் வீடுமெழுகுதல்.
  • எழுதிங்கள் சீர்சாமான்கள், நிறைநாழி, முக்காலி, மண்மேல்பலகை பேழைக்கூடைசீர், படி விநாயகர்பூஜை சேகரித்து வைத்தல்
  • விரதவிருந்து
  • மணமகள் வீட்டார் சீர்தண்ணீர் கொண்டுவருதல்
  • முகூர்த்தக்கால் வெட்டி வர மணமக்களின் வீட்டார்கள் பால் மரத்திற்கு பூஜை செய்தல்
  • வினாயகர் பூஜையுடன் மாப்பிளை வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
  • பசுமாட்டு சாணத்தில் தரைமெழுகி பிள்ளையார் பிடித்து அருகு சூடுதல்
  • மணமகன் வீட்டில் வெற்றிலை மூட்டை கட்டுதல்
  • மணமகள் வீட்டில் சீர்தண்ணீர் கொண்டு வருதல்
  • கணபதி பூஜையுடன் பெண் வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
  • வெற்றிலைக் கூடையை பேழைக்கூடையில் வைத்து பூஜை செய்து பெண் மடியில் 30 வெற்றிலை கட்டி கணபதியை கும்பிடுதல்
  • மணமக்கள் வீட்டார் மணநாள் குறித்தல்
  • மாலை வாங்கல்
  • சிறப்பு வைத்தல், கரகபானை புடச்சட்டி வாங்குதல்
  • மேல்கட்டு கட்ட கட்டுக்கன்னிக்குத் தாம்பூலம் வழங்குதல்
  • பிரமன் பூஜை செய்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வருதல்
  • மணமகளுக்குத் தண்ணீர் வார்த்தல்.
  • மணமகனுக்கு முகவேலை செய்ய குடிமகனுக்கு தாம்பூலம் வழங்குதல், மணமகனுக்கு முகம் வழித்துத் தண்ணீர் வார்த்தல்
  • மணமகனுக்கு ஆக்கைப் போட்டு தண்ணீர் வார்த்தல்
  • மணமக்களுக்கு பட்டினி சாப்பாடு போடுதல்
  • குலதெய்வத்திற்கு குப்பாரி போடுதல்
  • கங்கணம் கட்டுதல்
  • நாட்டுக்கல் சீர் செய்தல்
  • மணமகனுக்கு செஞ்சோறு சுற்றி எரிதல்
  • இணைச்சீர் மணவறை அலங்காரம் மடியில் வெற்றிலை கட்டுதல்
  • மங்கள வாழ்த்தை குடிமகன் சொல்லுதல்
  • அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
  • தாயார் மகனுக்கு தயிர் அன்னம்  ஊட்டுதல்
  • மகன் தாயை வணங்கி, ஆசிபெற்று பூங்கொடிக்கு மாலை சூடல்
  • மணமகன் குதிரைமேல் செல்ல மடத்தான் குடைபிடித்தல்
  • நாழி அரிசிக்கூடை
  • மாப்பிள்ளையை விடுதி வீட்டிற்கு அழைத்துச் செல்லல்
  • பொன்பூட்ட வந்தவருக்கு பூதக்கலம் தான் படைத்தல்
  • தாய்மாமன் பால்பழம் உண்ணல்
  • மாமன் பொட்டிட்டு பொன்முடித்து பட்டம் கட்டி பெண் எடுத்தல்
  • வாசல் படியில் நெல் போடுவது
  • மணவறை அலங்காரம்
  • மணமக்களை அலங்கரித்தல்
  • மணமக்களை மணவறைக்கு அழைப்பது
  • சூரிய நமஸ்காரம் செய்து மணமகள் மணமகனின் கால் கழுவுதல்
  • மண்மேல் பணம்
  • ஓமம் வளர்த்தல்
  • மாங்கல்யத்திற்கு கணபதி பூஜை செய்தல்
  • வெண்சாமரம் வீசுதல்
  • தாசி சதுராடுதல்
  • மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அணிவித்தல்
  • பெரியோர்கள் ஆசிகூறல்
  • மைத்துனர் கைகோர்வை
  • மங்கள வாழ்த்து குடிமகன் சொல்லுதல்
  • அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
  • மணமகளுக்கும் மணமகனுக்கும் கங்கணம் அவிழ்த்தல்
  • பாத பூஜை
  • தாரை வார்த்தல்
  • குங்குமம் இடுதல்
  • ஆரத்தி எடுத்தல்.
  • மணமக்கள் மணவறையைச் சுற்றி வருதல்
  • மணமக்களை இல்லத்திற்கு அழைத்தல்.
  • உள் கழுத்துதாலி அணிதல்.
  • மொய்காரி.
  • பரியம் செல்லுதல்.
  • ஊர்பணம்.
  • கூடைச்சீர்.
  • பந்தல்காரி  செலவு.
  • மணமகனுக்கும் மணமகளுக்கும் தண்ணீர் வார்த்தல்.
  • மணமக்களுக்கு புதுப்புடவை, சோமன் உருமாலை தரல்.
  • மணமகனுக்குச் மணமகள் தட்டுவாச்சாதம்  போடுதல்.
  • மணமன் மோதிரத்தை மைத்துனன் பிடுங்குவது.
  • கரகம் இறக்குதல்
  • மாப்பிள்ளை வீட்டில் பெண் காண்பது.
  • மணமக்களு தாயார் பால் அன்னம் ஊட்டல்.
  • மணமக்கள் விநாயகர் கோயிலில் வழிபடல்.
  • மணமக்களுக்கு மிதியடி அணிவித்தல்.
  • பெரியோர்களை தம்பதிகள் கும்பிட்டு மஞ்சள் நீராடுதல்.
  • வினாயகருக்கு மடக்கில் பானைப்பொங்கள் வைத்தல்.
  • வினாயகர் கோயிலில் சம்மந்தம் கலக்குவது.
  • மணமகள் எடுத்தமாமனுக்கு விருந்து வைத்தல்.
  • புலவர் பால் அருந்துதல்
  • மாமன் சீர்வரிசை.
  • பெற்றோர் மணமக்களுக்கு சீர்வரிசை
  • மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச்செல்லல்
  • மணமகள் ஊர் கிணற்றில் தாம்பூலம் விட்டு தண்ணீர் கொண்டு வருதல்
  • மணமக்களுக்குத் தண்ணீர் வார்த்தல்
  • மணமகள் விளக்கு ஏற்றுதல்
  • மணமக்களை பெண்வீட்டிற்கு அழைத்து வருதல்
  • சாந்தி முகூர்த்தம்
  • மாக்கூடை கொண்டு செல்லுதல்
  • மணமகன் சகோதரி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருதல்
  • குலதெய்வ கோயிலுக்கு கல்யாணபடி கொண்டு செல்லுதல்
  • மணமகள் வீட்டில் மணமகனுக்கு எண்ணெய் நீர் குளிப்பாட்டி விருந்து வைத்தல்
  • மணமகன் சகோதரி மணமக்களுக்கு விருந்து வைத்தல்
  • 1 comment: